உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் காரணமாக மே ஏழாம் திகதி பல பாடசாலைகள் மூடப்படும் என்று கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
மேலும் கீழ்க்கண்ட பாடசாலைகளைத் தவிர அனைத்துப் பாடசாலைகளும் அன்றைய தினம் வழக்கம் போல் செயல்படும் என்றும் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நாளை (06) நடைபெறவுள்ள தேர்தல் காரணமாக நாட்டின் அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்றும் (05) நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.