பொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை சட்டவிரோதமானது என்று உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்துள்ள மனுவை நாளை (14) விசாரிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.(Gotabhaya tomorrow culprit cage)
இந்த மனு இன்று (13) மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி பிரீதி பத்மன் சுரசேன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.
மனுதாரர் சம்பந்தமாக எடுக்க வேண்டிய அடுத்த கட்ட சட்டதிட்டங்கள் சம்பந்தமாக நாளை அறிவிப்பதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகியிருந்த மேலதிக சொலிஸ்டர் ஜெனரலிடம் நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதன்படி மனு நாளை (14) விசாரணைக்கு அழைக்கப்பட உள்ளது.
டீ.ஏ.ராஜபக்ஷ ஞாபகார்த்த அருங்காட்சியகத்தை நிர்மாணிக்க அரசாங்கத்தின் நிதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக, பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கொழும்பு நீதவான் நீதிமன்றில் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை செல்லுபடியற்றதாக்க உத்தரவிடுமாறு மனுதாரரான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தனது மேன்முறையீட்டில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
tags :- Gotabhaya tomorrow culprit cage
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- “மைத்திரிக்கு சித்தபிரமை” சிவாஜிலிங்கம் சீற்றம்
- இலங்கையில் அறிமுகமாகிறது யூரோ – 4 எரிபொருள்!!
- இந்து கலாசார அமைச்சை இழுத்து மூடுங்கள்: மறவன்புலவு சச்சிதானந்தன்
- பணம் பெற்ற 50 பேரின் பெயரை வெளிப்படுத்தியுள்ளேன் : ரஞ்சன்
- தனியார் வைத்தியர்கள் அரசாங்கத்திற்கு விடும் எச்சரிக்கை!!
- ‘சம்பத் கொலை’ : பயங்கரமான சம்பவமாகும் : மூடிமறைக்க வேண்டாம் : மஹிந்த
- கனடாவில் காணாமல் போன இலங்கை தமிழர் : தேடும் பணிகள் தீவிரம்
- பிரான்சில் பக்தர்களுக்கு கிடைத்த ஆசீர்வாதம்..!!!
- விடைபெறும் அமெரிக்க தூதுவர் : விருந்தளித்தார் மைத்திரி
- சந்துருவானை நாடு கடத்துமாறு கோரவில்லை : ஜனாதிபதி மறுப்பு
- ஆறு பேருக்கு இன்று அமைச்சு பதவி : ரவிக்கும் வழங்கப்படுகின்றதா?
- கோத்தபாய வேண்டாம் : அமெரிக்கா நேரடியாக தெரிவிப்பு : அதிர்ச்சியில் மஹிந்த குடும்பம்