பரிஸின் முக்கிய சுற்றுலாத்தலமான ஈஃபிள் கோபுரத்திற்கு முன்பு குத்தாட்டம் போட்ட பிரபல பொப் பாடகி கிரே நிக்கோல் கைது செய்யப்பட்டுள்ளார். famous bass singer France imprisoned tamil news
பல்கேரியா நாட்டைச் சேர்ந்த பொப் பாடகி கிரே நிக்கோல், தனது தோழியுடன் பிரான்ஸிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அவர்கள், உலகப் புகழ் பெற்ற ஈஃபிள் கோபுரத்திற்கு சென்ற சந்தோசத்தில் சாலையின் நடுவே குத்தாட்டம் போட்டனர்.
சாலையின் இரு புறங்களிலும் வாகனங்கள் சென்றுகொண்டிருந்த நிலையில் அவர்கள் நடனமாடிக் கொண்டிருந்தனர். நடனமாடிய காட்சியை கிரே நிக்கோல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து அப்பகுதிக்கு சென்ற காவல்துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
இது தொடர்பாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கும்போது, கிரே நிக்கோல் மற்றும் அவரின் தோழி ஆகிய இருவரும் சாலையின் நடுவே அனுமதியின்றி நடனமாடி பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் விதமாக செயல்பட்டதால் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்கள்.
மேலும், இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் சிலர் இவர்களை கடுமையாக விமர்சித்துள்ளனர். அத்துடன் இவர்களது ஆட்டத்தை கண்டு ரசித்த சிலர் ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
tags :- famous bass singer France imprisoned tamil news
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- பிரான்ஸ் ரயிலில் நிறைமாத கர்ப்பிணிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!
- திருட வந்த வீட்டில் செய்த காரியத்தால் மாட்டி கொண்ட திருடர்கள்!
- டொரோண்டோ துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டார்!
- யாஷிகாவின் கட்டில் போர்வைக்குள் இருந்த மஹத்தின் உள்ளாடை! கண்டெடுத்த கார்த்தி.