மின் கட்டணம் உயர்வு!

0
901

இன்று (28) தொடக்கம் 3 வாரங்களுக்கு மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் பொதுமக்களின் யோசனைகளை பெறவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறித்த ஆணைக்குழுவின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சாரசபையினால் முன்மொழியப்பட்டுள்ள கட்டண அதிகரிப்பை நாளை முதல் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இணையத்தளங்களில் காண முடியுமெனவும் அவர் குறிப்பிட்டார்.