கணேமுல்ல சஞ்சீவ படுகொலை சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 9 சந்தேகநபர்கள் தொடர்பான வழக்கை நாளை (07) தொலை காணொளி மூலம் விசாரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டுள்ளார்.
தொடர்புடைய நீதிமன்றத்தின் பதிவாளருக்கு தலைமை நீதிபதியால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நீதிமன்றப் பதிவகம் இது தொடர்பில் சிறை அதிகாரிகளுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அறிவித்துள்ளது.
தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போது ஏற்படக்கூடிய பாதுகாப்பின்மையைக் கருத்தில் கொண்டு நீதவான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
