வடக்கு, கிழக்கில் 50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டம் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர இழுபறிகளால் முடங்கியுள்ளதாக, சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளரான, அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.China India Diplomacy Issue 50000 House Scheme Delay Tamil News
இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சரவை அடுத்தவாரம் அதிகார பூர்வ அறிக்கை ஒன்றை எதிர்பார்க்கிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவிக்கும் போது,
வடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 ஆயிரம் வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டத்தை, ஒரு வீட்டை இந்தியா 2.2 மில்லியன் ரூபாவுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்க முன்வந்திருந்தது.
ஆனால், 1.3 மில்லியன் ரூபாவுக்கு கட்டிக் கொடுக்க சீனா முன்வந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தை சீனாவுக்கு வழங்குவதை இந்தியா எதிர்க்கிறது.
இந்த இராஜதந்திர மோதல்களால் இதுகுறித்து முடிவெடுக்க முடியாதுள்ளது. எனினும், இரண்டு தரப்புகளுடனும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பேச்சு நடத்துவார். ஏனென்றால், இரண்டுமே எமது நட்பு நாடுகள்.
இந்தப் பிரச்சினை சுமுகமாக தீர்த்துக் கொள்ளப்படும் என்பதில் சந்தேகமில்லை. அரசாங்கத்தின் பிரதான கரிசனை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பது தான் என கூறியுள்ளார்.
கொழும்பில் நேற்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போதே ராஜித இந்த விடயங்களை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- தூக்கு தண்டனை கைதிகளுக்கு விருந்தளிக்கப் போகும் ஜனாதிபதி..!
- பாலியல் சர்ச்சை : ‘தான் விரும்பியே தனுஷ்க குணதிலகவுடன் ஹோட்டலில் தங்கினேன்” : நோர்வே பெண் வாக்குமூலம்
- பாலியல் விவகாரம்: ‘பிளே போய்’ வாழ்க்கை வாழும் தனுஷ்கவின் நண்பன்
- ஹோமாகமவில் அச்ச நிலை : நடு இரவில் நிர்வாணமாக சுற்றும் கிரீஸ் பேய்
- அனந்தி சசிதரன் – ரிசாட் பதீயுதீனுடன் நெருங்கிய உறவு தொடர்பில் சர்ச்சை!
- இன்று அதிகாலை நடந்த கோர விபத்து : 19 பயணிகள் படுகாயம்
- கள்ளக்காதலியுடன் உல்லாசம்; 07 வயது மகளுக்கு போதைமருந்து கொடுத்த தந்தை
- மொனராகலையில் கொடூரம் : மாணவியை மாறி மாறி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியர்கள்
- யாழில் குடும்பத் தலைவன் செய்த செயல் : வயிறு பெருத்து காணப்பட்டதால் நடந்த விபரீதம்