பீகாரில் காப்பகத்தில் தங்கியிருந்த 34 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அம்மாநில முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான வீடுகளில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது. CBI conducted raid ministers houses connection rape 34 girls camp
பீகார் மாநிலம், முசாபர்பூரில் உள்ள தொண்டு நிறுவனம் சார்பில் காப்பகம் நடத்தப்பட்டு வந்தது. இதில், ஆதரவற்ற சிறுமிகள் பலர் தங்க வைக்கப்பட்டனர்.
இவர்களில் 34 பேர் முக்கிய பிரமுகர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காப்பகத்தை நடத்தி வந்த பிரஜேஷ் தாகூரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக தாகூரின் மனைவி கூறுகையில், `‘பீகார் மாநில சமூக நலத்துறை அமைச்சர் மஞ்சு வர்மாவின் கணவர் சந்தேஷ்வர் வர்மாவுக்கும் இதில் தொடர்பு இருக்கிறது. சந்தேஷ்வர் அடிக்கடி காப்பகத்துக்கு வந்து சென்றார்’ என குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும், பிரஜேஷ் தாகூரின் செல்போனை ஆய்வு செய்ததில் அவர் அமைச்சரின் கணவருடன் கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில் 17 முறை தொடர்பு கொண்டு பேசியிருப்பதும் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று சமூக நலத்துறை அமைச்சர் மஞ்சு வர்மா கடந்த வாரம் ராஜினாமா செய்தார். இதையடுத்து, எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்ததை தொடர்ந்து பீகார் அரசு இந்த வழக்கை சிபிஐ.க்கு மாற்றி உத்தரவிட்டது. காப்பக ஊழியர்கள், அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. CBI conducted raid ministers houses connection rape 34 girls camp
இந்நிலையில், மஞ்சு வர்மாவுக்கு சொந்தமான பாட்னாவில் உள்ள 3 வீடுகள், மோதிகாரி, பகல்பூரில் உள்ள வீடுகளிலும் சிபிஐ அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில், பல முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- யாழில் ஓடிக்கொண்டிருந்த காரில் ஏற்பட்ட பயங்கர சம்பவம்
- இரத்த தானம் வழங்கியவர்களுள் 30 பேருக்கு எயிட்ஸ்; அதிர்ச்சித் தகவல்
- மனைவியை முச்சக்கரவண்டியில் பலவந்தமாக கடத்திய கணவன்
- இரண்டாவது நாளாக தொடர்கிறது பெண் கைதிகளின் போராட்டம்
- செஞ்சோலை படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று
- போலியான ஆவணங்களைத் தயாரித்து பண மோசடி செய்த நபர் கைது
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- மடுத் தேவலாயத்தில் பக்தர்களுக்கு திடீரென ஏற்பட்ட அச்சம்; இன்று ஆவணி உற்சவம்