இலங்கைக்கு வருகை தந்துள்ள நடிகை வரலக்ஷ்மி சரத்குமார்

0
225

இந்தியாவின் பிரபல நடிகை யான வரலக்ஷ்மி சரத்குமார் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். நடிகை வரலக்ஷ்மி சரத்குமார்  சென்னையில் இருந்து இன்று (17) காலை 11.04 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

வரலக்ஷ்மி சரத்குமார் கதாநாயகியாக நடிக்கவுள்ள திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சர்வதேச திரைப்படத்தை இலங்கை சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் சதுன் ரத்னம் தயாரிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.