ஐ.பி.எல் தொடரின் அணிகளது உரிமையாளர்களுக்கும், இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இம்மாதம் 31ம் திகதி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சந்திப்புக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகி இருப்பதாக இந்தியன் ப்ரீமியர் லீக் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹேமங் அமின், அணி உரிமையாளர்களுக்குத் தகவல் அனுப்பியுள்ளார்.
மேலும், 2025ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். தொடர்பான பல்வேறு முக்கியத் தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி, ஓர் அணியால் தக்க வைத்துக் கொள்ளக்கூடிய வீரர்களின் எண்ணிக்கை தொடர்பான விதிகளில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.