Home Uncategorized இலங்கைக்கு வந்து ஒரு சில மணிநேரத்தில் மர்மமாக காணாமல் போன சீன நாட்டவர் : தீவிரமாக தேடும் படையினர்

இலங்கைக்கு வந்து ஒரு சில மணிநேரத்தில் மர்மமாக காணாமல் போன சீன நாட்டவர் : தீவிரமாக தேடும் படையினர்

0
இலங்கைக்கு வந்து ஒரு சில மணிநேரத்தில் மர்மமாக காணாமல் போன சீன நாட்டவர் : தீவிரமாக தேடும் படையினர்

(china natalist missing sri lanka)
இலங்கைக்கு வந்து ஒரு சில மணிநேரங்களிலேயே சீன நாட்டவர் ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளார்.
அவரைத் தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
ஜியாங் டோ என்ற சீனர் மேலும் இரண்டு பேருடன், கடந்த 11ஆம் திகதி இரவு இலங்கைக்கு வந்திருந்தார்.
அவர்கள், தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளை முன்னெடுக்கும் நிறுவனத்தின் கட்டுமானப் பகுதிக்கு கடந்த 12ஆம் திகதி அதிகாலை சென்றிருந்தனர்.

தெனியாய காட்டுப் பகுதியில் சுற்றித்திரிந்த சீனர், அன்று மாலை முகாமுக்குத் திரும்பவில்லை.

இதுதொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு தேடுதல்கள் நடத்தப்பட்டன. இதற்காக இராணுவத்தினரும் உதவிக்கு அழைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது.

தேடுதல்களின் போது, காணாமல் போன சீனரின் அலைபேசி, மேற்சட்டை மற்றும் காலணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :