கடும் உணவுப் பற்றாக்குறையை எதிர் நோக்கும் இலங்கை

0
559

இலங்கையில் மக்கள் கடுமையான உணவுத் தட்டுப்பாட்டை எதிர் கொண்டுள்ளதாக ஐ.நா சபையின் உலக உணவு திட்ட இயக்குனர் அப்தூர் ரஹீம் சித்திக் தெரிவித்துள்ளார்.

உணவுப் பற்றாக்குறை வீக்கம் 80 சதவீதமாக இருப்பதாகவும் வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்புகளை தொடர்ந்து இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் விதிக்கப்பட்ட கடுமையான வரி விதிப்புகளினால் இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.