(Ebola Virus Spread Again Across African Countries)
1976-ம் ஆண்டுகளில் தென் ஆபிரிக்க நாடுகளில் உயிர்கொல்லி நோயான எபோலா என்னும் வைரசின் தாக்கத்தினால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
எபோலா கிருமித் தொற்று ஏற்பட்ட இரண்டு நாட்களில் காய்ச்சல், கரகரப்பான தொண்டை, தசை வலிகள் (மற்றும் தலைவலி ஆகியவற்றுடன் அடையாளங்கள் ஆரம்பிக்கின்றன.
குறிப்பாக கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகியவற்றின் செயல்பாடு குறைந்து போனதைத் தொடர்ந்து வாந்தி, மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படுகின்றன.
இந்நிலையில் வடமேற்கு நாடான காங்கோவில் எபோலா நோய் பரவி வருவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அந்நாட்டில் இறந்த 21 பேரின் உடலை சோதனை செய்து பார்த்ததில் எபோலா வைரஸ் பரவி வருகிறது என உலக சுகாதார நிலையம் தெரிவித்துள்ளது.
எபோலா வைரசானது தொற்று ஏற்பட்டுள்ள ஒரு விலங்கின் ரத்தம் அல்லது உடல் திரவங்களால் பரப்படுகிறது. பழம் தின்னும் வௌவால்கள் கிருமியைக் பரப்புவதாக கூறப்படுகிறது.
இந்த உயிர்கொல்லி நோய்க்கு தடுப்பு மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் , முறையான சிகிச்சை மூலம் நோயாளியை சில நாட்கள் உயிர் வாழ வைக்கலாம் என கூறப்படுகிறது.
ஆபிரிக்க நாடுகளில் மீண்டும் எபோலா நோய் பரவ தொடங்கி உள்ளமை பெரும் அதிர்ச்சியை உண்டுபண்ணியுள்ளது .
Photo Source : bostonherald.com
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!
பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!
முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)