(Sinhala train employee Sexual harassment Tamil girl)
புகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் பெரும்பான்மையின ஊழியர் ஒருவர், தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்டதால் யாழ். நோக்கிச் சென்ற புகையிரதத்தில் பதற்றம் நிலவியிருந்தது.
இந்தச் சம்பவம் இன்றைய தினம் காலை 6.30 மணிக்கு கோட்டையில் இருந்து புறப்பட்டு யாழ். நோக்கிச் சென்ற புகையிரதத்திலேயே இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவிலும் யாழ்ப்பாணம் புகையிரத நிலைய அதிபரிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானியாவை சேர்ந்த குடும்ப பெண்ணொருவர் வவுனியா புகையிரத நிலையத்தில் இருந்து யாழ். நோக்கிச் சென்ற புகையிரதத்தில் ஏறியுள்ளார்.
இதன்போது குறித்த புகையிரதத்தில் பெருமளவில் சன நடமாட்டம் இல்லாமையினால் இதனைப் பயன்படுத்திக் கொண்டு, புகையிரதத்தில் பணியாற்றுகின்ற சிட்டை பரீட்சிக்கும் ஊழியர், குறித்த பெண்ணுடன் தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளார்.
இதனை அவதானித்த அங்கு நின்றவர்கள் குறித்த ஊழியரிடம் சென்று ஏன் இவ்வாறு நடந்து கொள்கின்றீர்கள் என கேட்ட போது, அவ்வாறு கேட்டவர்களை தாக்க முயற்சித்துள்ளார்.
மேலும் தமிழர்கள் கீழ்த்தரமானவர்கள் போன்ற தகாத வார்த்தைகளை அடிக்கடி பேசிக்கொண்டிருந்ததாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறியுள்ளனர்.
இதன் போது அங்கு சென்ற ஊடகவியாலாளர் ஒருவரையும் அவர் தாக்க முயற்சித்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் சாவகச்சேரி புகையிரத நிலையத்தை அண்மித்த போது நடந்து கொண்டிருந்தது.
இதன்போது நீங்கள் தமிழ் என்றால் என்னை ஒன்றும் செய்ய முடியாது, பொலிஸாராலும் யாராலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது. இங்கு நான் தான் பெரியவன் என்று மிரட்டும் தொனியில் குறித்த ஊழியர் அனைவரையும் மிரட்டியுள்ளார்.
இந்த சம்பவங்கள் நடைபெற்று கொண்டிருந்த போது, குறித்த புகையிரதத்தில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் எவரும் சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லை என்றும் இதனால் பயணித்த அனைவரும் பயத்தில் உறைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகையிரதம் யாழ். பிரதான புகையிரத நிலையத்தை வந்ததடைந்ததும், அந்தச் சம்பவம் தொடர்பில் யாழ். புகையிரத அதிபருக்கு குறித்த பெண்ணால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
அத்தோடு, சம்பவத்துக்கான ஆதாரமாக காணொளியும் வழங்கப்பட்டதுடன், இதனையடுத்து இதுதொடர்பில் தான் உயர் அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் முறைப்பாடு ஒன்றை செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை இந்த அச்சுறுத்தல் மற்றும் தகாத முறையில் நடந்து கொண்டமை குறித்து மனிதவுரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
More Tamil News
- மன்னாரில் மின்னல் தாக்கம் ; மூன்று வீடுகள் சேதம்
- ராவணா எல்ல நீர்வீழ்ச்சியில் ஆபத்து ; சுற்றுலாப் பயணிகளே அவதானம்
- இரு கட்சிகளிடையே மோதல்; மூவர் தப்பியோட்டம்
- விபத்தில் உயிரிழந்தவர் மூன்று கோடியை கடனாகப் பெற்ற ஆச்சரியம்
- தவறான சிகிச்சையால் 03 மாத குழந்தை பலியான சோகச் சம்பவம்
- குளவிக்கூட்டினால் மாணவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்
- மாங்குளத்தில் சூறாவளி ; 12 வீடுகள் சேதம்
- பால்மா தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்கப் போவதில்லை
- மனைவி கள்ளக்காதல்; கணவனுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு
- பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கின் வரி அதிகரிப்பு
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
Tags; Sinhala train employee Sexual harassment Tamil girl