அலிபாபா குகைப்போல எடப்பாடியின் உறவினர்களுக்கு மட்டுமே டெண்டர் திறக்கிறது – கனிமொழி

0
417
Karunanidhi currently goodhealth says Kanimozhi tamilnews

‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வரும் திமுக எம்.பி.யும் அக்கட்சியின் மகளிரணி செயலாளருமான கனிமொழி, சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டார். திருப்பத்தூரில் மக்கள் மத்தியில் அவர் பேசுகையில், “மத்தியில் உள்ள பாஜக அரசு விவசாயிகளுக்கு துரோகம் இழைத்து வருகிறது. இங்கே உள்ள அதிமுக அரசு பெண்களை பாதுகாக்க தவறிவிட்டது. இளைஞர்கள் மத்தியில் வேலைவாய்ப்பு என்பது வெறும் கனவாகவே மாறிவிட்டது. …

100 நாள் வேலைத் திட்டத்தில் ரூ. 400 கோடி அளவுக்கு மெகா ஊழல் நடைபெற்றுள்ளது.ஆட்சிக்கு வந்தவுடன் மதுபான கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என்ற வாக்குறுதி மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

டெண்டர்கள் அனைத்தும் எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர்களுக்குத்தான் கொடுக்கின்றனர். ஆனால், அது உலகளாவிய டெண்டர் என்கிறார்கள். அலிபாபா குகைபோல் அவர்களது உறவினர்களுக்கு மட்டுமே டெண்டர் திறக்கும் என்று கனிமொழி பேசினார்.