நாகை மாவட்டம்,தரங்கம்பாடி வட்டம்,நெடுவாசல் கிராமத்தில் வெள்ளநீர் வடிகால் ஆக்கிர மிக்கப்பட்டுள்ளதால் மழைநீர் வடிய வழியின்றி 100 ஏக்கருக்கும் மேற்பட்ட பயிர் நிலங்கள் நீரில் மூழ்கி நாசமாயின.100 acres agricultural land drowned water india tamil news
நெடுவாசல் கிராமத்தில் மேலக்கரை வடிகால் வாய்க்கால் வழியாக தான் சுமார் 100 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்களிலிருந்து வெள்ளநீர் வெளியேற்றப்படும்.
இந்நிலையில் சில ஆண்டுகளாக சில நபர்களால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளதால் வெள்ளநீர் வடிய வழியின்றி ஒட்டு மொத்த விவசாய நிலங்களும் நீரில் மூழ்கி கிடக்கிறது.
இதுகுறித்து நெடுவாசல் விவசாயிகள் கூறுகையில், பலமுறை அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லாததால் சில தினங்களாக பெய்த மழையால் நடவு செய்யப்பட்ட நாற்றாங்கால், தயார் நிலையில் இருந்த நாற்றுகள் என அனைத்தும் நீரில் மூழ்கி அழுகி விட்டன.
இனியாவது அதிகாரி கள் வாய்க்காலில் உள்ள ஆக்கிர மிப்புகளை அகற்றி தூர்வார நடவடி க்கை எடுக்க வேண்டுமென கூறினர்.
தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- இடைத்தேர்தலை சந்திக்க அதிமுக-விற்கு தைரியம் இல்லை! – மு.க ஸ்டாலின்!
- உச்சநீதிமன்ற தீர்ப்பை உறுதியாக நிறைவேற்றுவோம்! – பினராயி விஜயன் திட்டவட்டம்!
- ஜூடோவில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்! – இளையோர் ஒலிம்பிக்கில் சாதித்த 16 வயது வீராங்கனை!
- நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாவட்ட நிர்வாகம் மும்முரம்! – மாவட்ட ஆட்சித் தலைவர் ரோகிணி!
- இந்துக்களின் விழாக்களை எதிர்க்கும் கட்சிகள் தீய சக்திகள்! – ஹெச்.ராஜா!
- ”தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது எங்களின் கடமை”- பினராயி விஜயன்!
- ஜம்மு காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இன்று ஆரம்பம்