பிரெக்சிற் தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தைக்கு பிரித்தானிய பிரதமர் தெரேசா மே-யிற்கு ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, ஒக்டோபர் 18ஆம் திகதி நடைபெறவுள்ள ஐரோப்பிய கவுன்சில் உச்சிமாநாட்டிற்கு முன்பாக இப்பேச்சுவார்தை இடம்பெறவுள்ளது. European Union calls British Prime Minister Teresa May
ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்ட் டஸ்க்கின் அலுவலகத்தினால் நேற்று முன்தினம் (புதன்கிழமை) இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டஸ்க் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஒக்டோபர் 18 மாநாட்டின் போது பிரெக்சிற் தொடர்பாக விவாதிக்க ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் எதிர்பார்ப்புடன் காணப்படுகின்றனர் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தின் அழைப்பை பிரதமர் மே ஏற்றாரா அல்லது நிராகரித்தாரா என்பது தொடர்பாக பிரதமர் மே அலுவலக தரப்பிலிருந்து இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
tags :- European Union calls British Prime Minister Teresa May
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
********************************************
- லண்டனில் முடங்கியது இன்ஸ்டாகிராம்
- பிரித்தானியாவில் பொலிசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் காயம்: 6 பேர் கைது
- லண்டன் நோக்கி வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிக்கு ஏற்பட்ட பரிதாபம்
- பிரெக்சிற் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் கரிசனைகொள்ள வேண்டும் – அமைச்சர் டொமினிக் ராப்
- பாதுகாப்பு சிக்கல்: இங்கிலாந்து அமைச்சர்கள் தொலைபேசி எண்கள் கசிந்ததால் சர்ச்சை
- மார்பகப் புற்றுநோயால் மரணிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு