ஆவா குழுக்கள் போன்றவற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொள்வார்கள் இராணுவம் தேவையில்லை என சட்டமொழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். Jaffna Aava Gangsters News Sri Lanka Tamil News Today
வடக்கில் குற்றச்செயல்கள் அதிகரிப்பதற்கு அமைச்சு இடமளிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ள அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ள சில இளைஞர் குழுக்களை கட்டுப்படுத்துவதற்கு இராணுவத்தின் உதவியை பெற்றால் அது சர்வதேச சமூகத்திற்கு பிழையான செய்தியை தெரிவிப்பதாக அமையும் எனவும் கூறியுள்ளார்.
இராணுவத்திற்கு அதிக அதிகாரங்களை வழங்கினால் ஆவா குழுவை கட்டுப்படுத்துவதற்கு உதவ தயார் என இராணுவதளபதி தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து வந்துள்ள நிலையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
எனினும் பாதாள உலக குழுக்களை கட்டுப்படுத்தவும் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் படையினரை பயன்படுத்துவது குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் ஆராயவுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைக்கு அதிகாரம் கோருகிறது இராணுவம்!
25 ஆயிரம் வீடுகளை அமைக்கும் வேலைத்திட்டம்! அமைச்சர் சஜித்!
மகிந்தவை காப்பாற்றியது நல்லாட்சியே! மங்களசமரவீர கருத்து!
அதி நவீன விசேட படையணி உருவாக்கம் தொடர்பில் நாலக டி சில்வாவிடம் சிஐடியினர் விசாரணை!
ரூபாவின் பெறுமதியைக் காப்பாற்ற பிரதமரினால் விசேட குழு