பாடசாலை வாகனத்தில் 3 வயது பெண் குழந்தையொன்றை நடத்துனர் பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவமொன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. (3 year old girl sexually abused school van conductor arrested India News)
மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரில் உள்ள அயோத்யா நகர் பகுதியைச் சேர்ந்த 3 வயதுடைய குழந்தை ஒன்று அதே பகுதியில் உள்ள ஆரம்பப் பாடசாலையில் படித்து வந்தார்.
இந்த நிலையில் பாடசாலை முடிந்து வாடகைக்கு அமர்த்தப்பட்ட வான் ஒன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்த குறித்த குழந்தையை அந்த வானின் நடத்துனராக பணியாற்றிய இளைஞன் பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பாடசாலை முடிந்து வீடு திரும்பிய குறித்த குழந்தையை அவரது தாயார் குளிக்க வைத்த போது நடத்துனரால் தனக்கு ஏற்பட்டவற்றை அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக குழந்தையின் பெற்றோர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து, அந்த நடத்துனர் மீது பாலியல் வன்புணர்வு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
போஸ்கோ சட்டத்தின் கீழ் அந்த நடத்துனர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளதுடன், இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகின்றது.
கடந்த ஆண்டு 12 வயதிற்கும் குறைவான குழந்தைகள், சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டம் மத்திய பிரதேசத்தில் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- இந்திய இராணுவ வீரர்களின் இரத்தத்திற்கு மோடி அவமரியாதை செய்துள்ளார்
- தூய்மை இந்தியா திட்டத்தால் 20,000 குழந்தைகள் காப்பாற்றல்
- ராஜீவ் காந்தியை கொலை செய்ய இந்தியாவிற்கு வரவில்லை; சாந்தன்
- மும்பையில் சிஏஜி அலுவலக ஊழியர் ஆணவக் கொலை
- பெற்ரோல் விலை மீண்டும் உயர்வு
- 2 பிள்ளைகளை தவிக்க விட்டு கள்ளகாதலனுடன் தப்பியோடிய தாய்
- உற்பத்தியே இல்லாத காற்றாலை மின்வாரியத்தில் ரூ.9 கோடி ஊழல் – ஸ்டாலின் புகார்
- டெல்லியில் சிகிச்சை பெற்றுவந்த 11 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Tags; 3 year old girl sexually abused school van conductor arrested India News