17 வருடங்களின் பின் கொலைக் குற்றவாளிக்கு மரண தண்டனை!

0
406
TAMIL NEWS Death penalty murder convict afterthen 17 years

(TAMIL NEWS Death penalty murder convict afterthen 17 years)

மகவெவ – குடாவெவதெனிய பிரதேசத்தில் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில் ஒருவருக்கு சிலாபம் மேல் நீதிமன்ற நீதிபதி இவோன் பெர்ணான்டோ மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

அதே பிரதேசத்தை சேர்நத மாரசிங்க ஆராச்சிகே என்ற நபருக்கே இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2001 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30 ம் திகதி அல்லது அதனை அண்மித்த தினமொன்றில் மகவெவதெனிய பிரதேசத்தில் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக பிரதிவாதி மீது குற்றம்சுமத்தப்பட்டு சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளதால் நீதிபதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

(TAMIL NEWS Death penalty murder convict afterthen 17 years)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites