வடக்கு மாகாண சபையின் கீழ் இயங்கும் மருத்துவமனைகளில் பணியாற்றும் தாதியர்கள் இன்று சுகவீன விடுப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என்று அரச தாதியர் உத்தி யோகத்தர் சங்கத்தின் உப தலைவர் சிவயோகன் தெரிவித்தார். Northern Province Nurses Sick Leave
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
2016ஆம் ஆண்டு மருத்துவ சேவை நிலை உத்தியோகத்தர்களுக்கு மேலதிக நேரக் கடமைக் கொடுப்பனவு வழங்கத் தீர்மானிக்கப்பட்டது.
அதற்கான நிதி நடப்பாண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த ஆண்டுக்கான நிதி எமக்கு இன்னமும் வழங்கப்படவில்லை. எனினும் கிழக்கு மாகாண சபையின் கீழ் இயங்கும் மருத்துவமனையில் பணியாற்றுபவர்கள் மற்றும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் பணியாற்றுபவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபையின் கீழ் இயங்கும் மருத்துவமனையில் பணியாற்றுபவர்களுக்கு இன்றுவரை இந்தப் பணம் வழங்கப்படவில்லை. இதனை வழங்க வலியுறுத்தியே இன்று போராட்டத்தில் குதிக்கவுள்ளோம் – என்றார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- போதைப்பொருள் வியாபாரிகளுக்கு தண்டனை வழங்க விசேட நீதிமன்றம்
- பதுளையில் ஒன்றிணைந்த எதிரணியினரின் பேரூந்தின் மீது தாக்குதல்
- 16 வயது மாணவி பாலியல் துஷ்பிரயோகம்; சந்தேக நபர் விளக்கமறியலில்
- ஒன்றிணைந்த எதிரணியின் பேரணியில் முகமூடி அணிந்த குழுக்கள்
- பிரதமரும் ஜனாதிபதியும் கஷ்டத்திற்குள்ளாவதை யாராலும் தடுக்க முடியாது
- கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெறும் வீதிகள்
- நாடாளுமன்றத்தில் முக்கிய சட்டமூலம் சமர்ப்பிப்பு
- எதிரணியினரின் பேரணியில் முழங்காலிற்கு கீழ் சுடுவதற்கு அனுமதி
- ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியாக ஹேமசிறி பெர்னாண்டோ நியமனம்