கள்ள காதல் மோகம் அதிகரித்தால் அதற்க்கு இப்படி எல்லாமா செய்வார்கள் .யாராவது பெற்ற குழந்தையை கொல்லுவார்களா , சென்னை குன்றத்தூர் பகுதியில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது .(Chennai girl illegal relationship affection )
விஜய் மற்றும் இவரது மனைவி அபிராமி என்பவரும் சென்னை குன்றத்தூர் பகுதியில் வாழ்ந்து வந்தனர் .
அபிராமிக்கு அங்குள்ள பிரியாணி கடையில் பணிபுரியும் சுந்தரம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கள்ளகாதலால் தமது இரு குழந்தைகளை விஷம் வைத்து கொன்றுள்ளார் அபிராமி.
இதையடுத்து வெளியூருக்கு தப்பி செல்வதற்கு அபிராமியிடம் பணம் இல்லை என்பதால் தன் கணவன் கட்டிய தாலி சங்கிலியை விற்று, பணத்தை எடுத்து கொண்டு கேரள மாநிலத்திற்கு செல்வதற்காக கோயம்பேடு சென்று பேருந்தில் தப்பி சென்றுள்ளார்.
இரு குழந்தைகளை கொலை செய்த சம்பவம் அறிந்து போலீசார் அபிராமியை தேடிவந்தனர். அபிராமி இருசக்கர வாகனத்தை கோயம்பேட்டில் விட்டு விட்டு வெளியூருக்கு தப்பித்துள்ளார் என்பதை பொலிசார் உறுதி செய்தனர்.
இந்த வழக்கில் பெற்ற குழந்தைகளை திட்டமிட்டு கொலை செய்த அபிராமியை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், எங்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகின்றன. எனது கணவர் ஏ டிஎம்- ல் பணம் நிரப்பும் பணியை செய்துவருகிறார். எனக்கு பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும். இதனால் அடிக்கடி ஓட்டலில் இருந்து பிரியாணி ஆர்டர் செய்து, வீட்டுக்கு வரவழைத்து சாப்பிடுவேன்.
சுந்தரம் தான், வீட்டுக்கு பிரியாணியை எடுத்து வருவார். என்னிடம் இருந்த அன்பு காரணமாக ஒவ்வொரு முறையும் கூடுதலாக பிரியாணி கொண்டு வருவார். எங்கள் நட்பு கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் ஏற்பட்டது. பின்பு அது காதலாக மாறி இருவரும் சந்தோசமாக இருந்தோம் என கூறினார். பின்னர் அபிராமியையும் சுந்தரத்தையும் சிறையில் அடைத்தனர்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
பிக்பாஸ் சூடே இன்னும் தணியாத நிலையில் ஆர்யாவின் அந்த நிகழ்ச்சியில் இரண்டாம் பாகம்! (Exclusive Stills)
பிக்பாஸ் இல்லத்தில் காதலியுடன் அசிங்கமாக நடந்து கொண்ட டானியல்…!
இந்த நாய் பின்னால் சென்றால் வெற்றி நிலைக்காது- பிரபல நடிகரை பார்த்து கூறிய நடிகை!
இளைஞர்களை சூடாக்கும் வகையில் பரினீத்தி சோப்ரா வெளியிட்ட ஹாட் போட்டோ இதோ …!
பிராச்சியை சமாதானப்படுத்தி மகத்துடன் சேர்த்து வைக்க பிக்பாஸ் மேடைக்கு அழைத்த பிக்பாஸ் குழுவினர்- அதற்கு பிராச்சி என்ன செய்தார் தெரியுமா?
பிரபல காமெடி நடிகருடன் ஊர் சுற்றும் செம்பா.. இருவரும் ஒன்றாக இருக்கும் காட்சி இதோ உங்களுக்காக..!அழுது போடும் சீன் எல்லாம் பார்த்து நான் ஏமாற மாட்டேன்… ஐஸ்வர்யாவை விளாசிய கமல்!
பிக்பாஸே ஒரு நாடகம்- பிராச்சியுடன் இணைந்த மகத் பேட்டி!
எமது ஏனைய தளங்கள்
Astro.tamilnews.com
france.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com