{ court awarded Gnanasara Thera }
பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட கடூழிய சிறைத்தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்வதை, மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
குறித்த மேன்முறையீட்டுக்கு அமனுதி வழங்குவதா இல்லையா என்பது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் ப்ரீதி பத்மன் சூரசேன உள்ளிட்ட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று பரிசீலிக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்கு அமைவாக ஞானசார தேரருக்கு அண்மையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் ஆறு வருடங்கள் கடூழி சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
எனினும் எதிர்காலத்தில் ஞானசார தேரர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்படவுள்ளதாக பொதுபலசேனா அமைப்பின் தேசிய அமைப்பாளர் விதாரன்தெனிய கந்த தேரர், இந்த தீர்ப்பிற்கு பின்னர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
Tags: court awarded Gnanasara Thera
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- கிளிநொச்சி படுகொலை : சந்தேக நபர் கைது : தொலைபேசியில் கிடைத்த ஆதாரம்
- தெற்கு மாகாண தாதியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்!
- யால தேசிய வனம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது!
- 5 மாத கர்ப்பிணி நித்யகலாவின் மரணத்திலிருந்து வெளியாகியுள்ள திடுக்கிடும் தகவல்கள்!
- கட்டுநாயக்க விமானநிலையத்தில் இந்திய பிரஜை ஒருவர் கைது!
- யுத்தத்தில் அங்கவீனமடைந்த பிரிகேடியர்களுக்கு பதவி உயர்வு
- சவால்கள் வந்தாலும் நாட்டை பாதுகாத்து நல்லாட்சி அரசாங்கம் செயற்படுகின்றது; ரணில்
- மட்டக்களப்பில் யானை தாக்குதலில் ஆணின் சடலம் மீட்பு