கொழும்பு – மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு : இளம் பெண் மரணம்

0
528
shooting incident occurred Jumma Junction Maligawatta Colombo

(shooting incident occurred Jumma Junction Maligawatta Colombo)

​கொழும்பு, மாளிகாவத்தை ஜூம்மா சந்திப்பகுதியில் இன்று (26) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

இன்று மாலை 6 மணியளவில் மாளிகாவத்தை ஜூம்மா பள்ளி சந்தியில் புடவைக்கடைக்கு அருகில் உள்ள வீதியில் வைத்து குறித்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் கொழும்பு 10 மாளிகாவத்தை பிளேஸில் வசிக்கும் 31 வயதான எம்.எம.சித்தி ரினோசா என்ற பெண்ணே மரணமானார்.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த பெண் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும் வழியில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், பாதையில் சென்று கொண்டிருந்த பெண்ணின் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

(shooting incident occurred Jumma Junction Maligawatta Colombo)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites