இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வழிகாட்டலுக்கமைய, எரிபொருட்கள் பழைய விலையிலேயே விற்கப்படும் என எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். Sri Lanka Petrol Price
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பெற்றோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்தும் ஐ.ஓ.சியும் எரிபொருட்களின் விலையை அதிகரித்தது.
இந்நிலையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தாம் விநியோகம் செய்யும் எரிபொருட்களை பழைய விலையிலேயே விற்பனைசெய்ய எரிபொருள் நிலைய உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.