கடந்தவாரம் முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பகுதியில் முச்சக்கர இழுவை வண்டியொன்றில் (ஒட்டோ) வைத்து விடுதலைப்புலிகளுக்குச் சொந்தமான பொருட்கள் கைப்பெற்றப்பட்டமையும் சந்தேகநபர்கள் சிலர் கைது செய்யப்பட்டமையும் அறிந்ததே. Hidden Sri Lanka Military Officers Behind LTTE Intelligence Team
அதன்படி ஓட்டுசுட்டான்பகுதியில் 20 கிலோ கிளைமோர் குண்டு, கைக்குண்டுகள், ரிமோட்கொண்றோல்கள், ரி-56 ரக துப்பாக்கிரவைகள், புலிகளின் சீருடைகள் விடுதலைப் புலிகளின் கொடிகள் ஆகியன கைப்பற்றப்பட்டதாக சிறிலங்கா காவற்துறையால் ஒரு பட்டியலும் வழங்கப்பட்டது.
இந்தசம்பவத்தில் உடனே இருவர் கைது செய்யப்பட்டதாகவும் ஒருவர் தப்பியோடிவிட்டதாகவும் காவற்துறைத் தரப்பில் கூறப்பட்டது.
இது சுவிஸ்நீதிமன்றத்தில் விடுதலைப்புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பாக கருதிக்கொள்ள ஆதாரம் இல்லை என ஒரு தீர்ப்பு வந்த பின்னர் புலிகளின் மீள் உருவாக்கம் குறித்த செய்திக்காக நடாத்தப்பட்ட நாடகம்.
இந்தநிலையில் இதுகுறித்து ரியர் அட்மிரல் சரத் வீரசேகர நேற்று கொழும்பில் வைத்து புதிய அதிர்ச்சி செய்தி ஒன்றை கூறியுள்ளார்.
அதாவது இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் முன்னர் பொட்டம்மானின் உளவுப்பிரிவில் பணியாற்றியவர் எனவும் பொட்டம்மானின் உளவுப்பிரிவில் இருந்த இவர் உண்மையில் சிறிலங்கா இராணுவ உளவாளி எனவும் முன்னர் புலிகள் வைத்திருந்த தாக்குதல் திட்டங்களை அறிந்து கொள்வதற்காக இராணுவம் இவருக்கு அதிக பணத்தை வழங்கி உளவுத்தகவல்களை பெற்றதாகவும் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இவ்வாறான உளவாளிகள் இன்னமும் முன்னாள் போராளிகளிடையே கலந்திருப்பதால் அவசரப்பட்டு அவ்வாறான ஒருவரை கைது செய்தமை அரசியல் தலையீட்டுடன் சிறிலங்கா புலனாய்வுத்துறைக்கு செய்யபட்ட ஒரு பெரிய துரோகம் எனவும், அட்மிரல் சரத் வீரசேகர கூறியுள்ளார்.
தற்போது விளக்கமறியலில் உள்ள இந்த உளவாளி வெளியே வந்ததும் புலிகளின் ஆதரவாளர்களால் கொலை செய்யப்படலாம் எனவும்,சரத் வீரசேகர கவலைகொண்டுள்ளார்.
அட்மிரல் சரத் வீரசேகர கூறியுள்ள இந்த தகவலால் முன்னாள் போராளிகள் மத்தியில் பெரும் குழப்பம் விளைந்துள்ளது.
இராணுவ தளபதி கூறியுள்ள இந்த விடயம் உண்மையானதா அல்லது முன்னாள் போராளிகள் மத்தியில் குழப்பத்தை உண்டாக்கும் வண்ணம் கூறப்பட்டதா என பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வட்டி இல்லா கடன் வழங்க அரசாங்கம் நடவடிக்கை
- நண்பியின் நிர்வாண படங்களை காதலனுக்கு வழங்கி பணம் பெற முயற்சித்த நண்பி – வௌ்ளவத்தையில் சம்பவம்
- யாசகம் பெறுவதற்கு இன்று முதல் தடை
- பல தமிழ் பெண்களின் வாழ்வை சீரழித்த பிரச்சினைக்கு விரைவில் முடிவு
- மனைவி மற்றும் பெற்ற பிள்ளைகள் மீது அசிட் ஊற்றிய கொடூர தந்தை…….!
- கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு 500 வது நாள்
- பெரிய மார்பகம் இருந்தால் தான் திரைத்துறையில் வெற்றி! அதிர்ச்சி கொடுத்த நடிகையின் பேட்டி!
- ஒரு கோப்பை தேநீரின் விலையை குறைக்க நடவடிக்கை
- ஆடு மேய்க்க சென்ற சிறுமியை ஈவிரக்கமின்றி….பின்னர் நடந்த விபரீதம்
- புலம் பெயர் தமிழர்களுக்கு ஊடக நிறுவனங்களுக்கான அனுமதியை வழங்க வேண்டாம்
- மதுவை ஊற்றிக்கொடுத்து சகமாணவி பலாத்காரம்- வீடியோ எடுத்து மிரட்டி ஓராண்டாக சித்ரவதை செய்த மாணவர்கள்
- இளம் ஆசிரியையின் கள்ளக் காதல் அம்பலமானது: யாருடன் தெரியுமா?