(Northern Province honored 12 Police Officers performed LTTEs weaponry)
அண்மையில் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் கிளைமோர் குண்டு உட்பட தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை மீட்ட போது சிறப்பாக செயற்பட்ட 12 பொலிஸ் அதிகாரிகளுக்கு வட மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபரால் கௌரவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் குறித்த நிகழ்வு கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது
இதன்போது அண்மையில் ஒட்டுசுட்டான் பகுதியில் பொலிசாரால் மீட்கப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் அது தொடர்பான கைது நடவடிக்கைகளின் போது, சிறப்பாக ஈடுபட்டவர்களுக்கே இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
மாங்குளம், ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு ஆகிய பொலிஸ் நிலையங்களை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் பன்னிரண்டு பேர் வடமாகான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபரால் கௌரவிக்கப்பட்டனர்.
வடமாகான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் வட மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களையும் சேர்ந்த பிரதி பொலிஸ்மா அதிபர்கள், பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட பொலிஸ் உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வினை தொடர்ந்து பொலிஸ் உயர் மட்ட குழுவினரின் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.
(Northern Province honored 12 Police Officers performed LTTEs weaponry)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இலங்கையின் மூத்த குடிகள் தமிழர்தான் – சிங்கள தலைமைகள் சினமடைந்தாலும் அதை வலியுறுத்துவேன்
- மாணவி றெஜினாவின் கொலையில் அரச பிரதிநிதிகள் பாரபட்சம் காட்டுவது ஏன்? பிரதேச மக்கள் விரக்தி
- நடப்பு சாம்பியன் நொக் அவுட் ஆனது ஃபிபாவின் சாபமா – எலைட் பிரிவில் சேர்ந்தது ஜெர்மனி!
- கட்சி பேதங்களை மறந்து உழைத்தால் சிறுமி றெஜினாவின் இழப்பே இறுதி படுகொலையாக இருக்கும் – மாணவர் போராட்டத்தில் டக்ளஸ்
- 24 மனைவிகள் , 149 குழந்தைகள் ,கிறிஸ்தவ பாதிரியாரின் லீலைகள்
- அண்ணனும் தங்கையும் காதல்: பெற்றோர் எதிர்ப்பால் எடுத்த முடிவு
- காதலனுடன் ஊர் சுற்றிய பிரியங்கா கர்ப்பம்! அதிர்ச்சியில் இந்தியுலகம்.
- பாதிரியார்களால் பெண் பாலியல் பலாத்காரம்; பொலிஸாரிடம் அறிக்கை கேட்கும் தேசிய மகளிர் ஆணையம்