யாழ்ப்பாணத்தில் 30 வருட யுத்தத்தின் பின்னர் 200 மில்லியன் ருபா முதலீட்டில் யாழில் உப்பு உற்பத்தி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (Jaffna Salt Manufacturing Company set investment 200 millio)
யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட தனங்கிளப்பு அறுகுவெளி பகுதியில் நேற்று ( 27 )ஆம் வடமாகாண மகளீர் விவகாரம் மற்றும் கைத்தொழில் கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் திறந்து வைத்தார்.
தனியார் முதலீட்டாளர்களின் ஏற்பாட்டில் நேற்று புதன்கிழமை தனங்கிளப்பு அறுகுவெளி பகுதியில் மாலை 4.30 மணியளவில் இந்த உப்பு உற்பத்தி நிறுவனத்தின் ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றன.
வடமாகாண சபை மற்றும் தென்மராட்சி பிரதேச செயலாளரினால் 100 ஏக்கர் அரச காணிகள் வழங்கப்பட்டு, லண்டனில் புலம்பெயர்ந்து வசித்து வரும் குப்பிளானைச் சேர்ந்த கந்தையா பிரேம்தாஸ் பிரதான முதலீட்டாளராக 200 மில்லியன் ரூபா நிதியை முதலீடு செய்து யாழ்.மாவட்டத்தில் இந்த உப்பு உற்பத்தி நிறுவனத்தினை ஆரம்பித்துள்ளார்.
இந்த உப்பு உற்பத்தி நிறுவனம் சகாதேவன் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆலோசனையில் கீழ் இந்தப் பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உப்பு உற்பத்தி நிறுவனத்தில் யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 300 இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படவுள்ளன.
வடமாகாண சபையினால் ஈழத்து புலம்பெயர் மக்களினால் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்படும் முதலீட்டுத் திட்டங்களில் இந்த உப்பு நிறுவன முதலீடு மிகப்பெரிய முதலீட்டின் ஒரு பங்காக கருதப்படுகின்றது.
இதன்போது, நிகழ்வில் உறுப்பினர்களுக்கான கௌரவங்களை தவிர்த்து அந்த நிதியைப் பயன்படுத்தி தென்மராட்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட 110 வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் வடமாகாண முதலமைச்சரின் செயலளார் திருமதி கேதீஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர், கேசகவன் சயந்தன் மற்றும் சுகிர்தன், தென்மராட்சி பிரதேச செயலாளர் மற்றும் யாழ்.மாவட்ட செயலக உதவி திட்டப்பணிப்பாளர் ஸ்ரீரங்கன், மற்றும் கைத்தொழில் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் ஸ்ரீமோகனன் மற்றும் சகாதேவன் ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனர் சகாதேவன் மற்றும் தென்மராட்சி பிரதேச சபை தவிசாளர் கந்தையா வாமதேவன் மற்றும் தென்மராட்சி பிரதேச சபை அரியகுட்டி நிமலருபன் தனங்கிளப்பு வட்டார உறுப்பினர் மற்றும் பிரதேச செயலக உறுப்பினர்கள் மற்றும் தென்மராட்சி பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள் பொது மக்கள் எனப் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
tags :- Jaffna Salt Manufacturing Company set investment 200 millio
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- மாணவி றெஜினாவின் கொலையில் அரச பிரதிநிதிகள் பாரபட்சம் காட்டுவது ஏன்? பிரதேச மக்கள் விரக்தி
- நடப்பு சாம்பியன் நொக் அவுட் ஆனது ஃபிபாவின் சாபமா – எலைட் பிரிவில் சேர்ந்தது ஜெர்மனி!
- ‘அரோகரா’ கோஷம் விண்ணைப் பிளக்க ரத பவனி வந்தாள் நாகபூஷணி!
- பலநூறு தமிழர்களின் உயிர்களை காப்பாற்றியவரா! வெள்ளை வானில் கடத்தியவரா! அடுத்த ஜனாதிபதி?
- அரசியல்வாதிகளின் உடந்தையுடன் பாதாள குழுக்கள் செயற்படுகின்றன – நாடு பாரிய ஆபத்தில் உள்ளது
- இந்தியாவுக்கு அமெரிக்கா மிரட்டல்
- பிக் பாஸ் வீட்டில் முளைத்த காதல்.. : வயது வித்தியாசம் தான் பிரச்சினையாம்..!
- அரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி!!