மனைவி உயிரோடு இருக்கும் போதே 69 வயதுடைய நபர் ஒருவர் 48 வயதுடைய பெண் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இதனால் கோபமடைந்த 68 வயதுடைய முதல் மனைவி, கணவனுக்கு எதிராக அதிரடியாக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த சம்பவம் களுத்துறையில் பதிவாகியுள்ளது.(kalutara 69 old second married)
சம்பவம் தொடர்பில் 68 வயதுடைய முதல் மனைவி பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்டுள்ள முறைப்பாட்டில்,
எனது கணவனுக்கும் எனக்கும் 1973 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
எமக்கு 44, 37 வயதுடைய இரு மகன்கள் உள்ளனர்.
திருமணமாகி சில காலப்பகுதியில் எனது கணவன் பல பெண்களுடன் கள்ளத் தொடர்பை வைத்திருந்தார்.
இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு 48 வயதுடைய பெண் ஒருவரை இரண்டாவது முறையாக திருமணம் செய்தார்.
எனது கணவருக்கு நிறைய சொத்து உள்ளது. எனது கணவனின் செயற்பாட்டால் எனது மகன்கள் அவமானத்தை எதிர்கொண்டுள்ளனர் என களுத்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டை தொடர்ந்து பொலிஸார் கணவனை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியதோடு அவருக்கான தீர்ப்பு எதிர்வரும் மாதம் 17 ஆம் திகதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
tags :- kalutara 69 old second married
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- முஸ்லிம்களின் நன்மை கருதியே சிறையில் காற்சட்டை அணிய இணங்கினேன்
- காத்தான்குடியில் கோர விபத்து – வேனில் பயணித்த மூவர் மரணம்
- இறுதி கட்டத்தில் திரில் கோல் போட்டு எகிப்தை வீழ்த்திய சவுதி அரேபியா!
- ரஷ்யாவை அதன் சொந்த மைதானத்தில் பந்தாடியது உருகுவே!!!
- தென்னிந்தியாவை ஆட்டிப் படைக்கும் பிக்பாஸ் காய்ச்சல்!
- மஹிந்தவின் ஊடக இணைப்புச் செயலாளர் சிங்கப்பூரில் கைது
- தவறான நட்பால் கொல்லப்பட்ட ராணுவ அதிகாரியின் மனைவி (UPDATE)
- நான் திருடன்தான் என்றால், என்னையும் சிறையில் அடையுங்கள் – நாமல் ராஜபக்ஷ விரக்தி