நாளை செவ்வாய்க்கிழமை விசேட செய்தியொன்றினை வெளியிடவுள்ளதாக பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசாரதேரர் தெரிவித்தார்.(galagoda special statement)
காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் வைத்து ஞானசார தேரர் அச்சுறுத்தியதாக தொடரப்பட்டிருந்த வழக்கில் ஞானசாரதேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது.
இத்தண்டனைக்கு எதிராக ஞானசாரதேரர் சார்பில் மேன்முறையீடு செய்யப்பட்டது.
மேன்முறையீட்டு மனுவை விசாரித்த ஹோமாகம நீதிமன்ற நீதிவான் ஞானசார தேரரை தலா ஐந்து இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த இரு சரீர பிணையில் விடுதலை செய்தார்.
நீதிமன்றின் அனுமதியின்றி வெளிநாட்டு விஜயத்தினை மேற்கொள்ள முடியாது என்ற நிபந்தனையுடனான பிணை வழங்கினார்.
பிணைப்பத்திரத்தில் கைச்சாத்திட்ட ஞானசாரதேரர் ஹோமாகம நீதிவான் நீதிமன்ற வளாகத்தைவிட்டு வெளியேறியபோது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (நாளை) விசேட செய்தியொன்றினையும் வெளிப்படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சிறைச்சாலைக்குள் சங்க சட்டத்தையும் நீதிமன்ற சட்டத்தையும் காப்பாற்றிக் கொண்டு தண்டனை அனுபவித்ததாகவும் அவர் கூறினார்.
tags :- galagoda special statement
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- கொழும்பில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம்
- பரபரப்பான ஆட்டம் சமனிலை – நாக் அவுட் பிரிவில் நுழைய ஜப்பான் – செனகல் பிரயத்தனம்
- உண்மையை அறியாமல் உயிரச்சுறுத்தல் விடுக்கின்றனர் – உளவியல் ரீதியில் சித்திரவதை என்கிறார் சந்தியா எக்னலிகொட
- பனாமாவை துவைத்தெடுத்த இங்கிலாந்து – நாக் அவுட் சுற்றில் நுழைந்தது! ரொனால்டோவை மிஞ்சினார் கேன்
- பறந்துகொண்டிருந்த ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமானத்தில் பெண் ஒருவர் மரணம்
- சிறுத்தையை கொன்றவர்களுக்கு எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியல்!
- மனிதர்களை கொலை செய்த ஹிட்லராக மனிதன் மாறமுடியும் என புத்தர் போதிக்கவில்லை
- உண்மையை அறியாமல் உயிரச்சுறுத்தல் விடுக்கின்றனர் – உளவியல் ரீதியில் சித்திரவதை என்கிறார் சந்தியா எக்னலிகொட