பருவமழை சரியாக பெய்ய வேண்டும் என தவளைக்கு திருமணம் செய்து வைத்து வழிபாடு செய்துள்ளனர் மத்தியப்பிரதேச மக்கள்.wedding led “frog-frog” madhya pradesh
மத்தியப்பிரதேச மாநிலம் சட்டர்பூர் நகரைச் சுற்றி நூற்றுக்கணக்கான கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள், `உரிய காலத்தில் பருவமழை பொழிய வேண்டும்’ என்று நூதன முறையில் வழிபாடு செய்வது வழக்கம்.
அந்தவகையில், மத்திய பிரதேச மாநிலத்தின் பெண் மற்றும் குழந்தை வளர்ச்சித்துறை அமைச்சராக உள்ள பா.ஜ.க-வை சேர்ந்த லலிதா யாதவ், `அசாத் உட்சவ்’ வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்தப் பூஜையில், இரண்டு தவளைகளை மணக்கோலத்தில் அலங்கரித்து, திருமணச் சடங்குகள் செய்து, சிவப்பு கயிறு கட்டி திருமணம் முடித்து வைத்தனர்.
இது குறித்து அமைச்சர் கூறுகையில், `வறட்சியால் புண்டேல்கண்ட் பகுதியில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு, தவளைகளுக்குத் திருமணம் முடித்து வைத்தோம். இவ்வாறு செய்தால் நிச்சம் மழைபெய்யும் என நம்பப்படுகிறது. நமது விவசாயிகளின் நலனுக்காக நாங்கள் பிரார்த்தனை செய்துள்ளோம்’ என்றார்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :
- ஆயுள் தண்டனை கைதி வேலூர் சிறையில் தூக்கிட்டு தற்கொலை!
- இயக்குனர் கவுதமன் சற்றுமுன் திடீர் கைது!
- சென்னையில் பிரபல ரவுடி சிடி மணி கைது!
- மாநகரப் பேருந்தை சிறைபிடித்து பேருந்து தினம் கொண்டாடிய 10 பேர் கைது!
- சென்னை கிண்டியில் ITI மாணவர் அடித்து கொலை!
- முதல்வர் எடப்பாடி பொய் கூறுகிறார்! – விவசாயிகள்!
- நடிகர் விஜய் வசந்த் ஊட்டியில் விபத்துக்குள்ளானார்!
- மக்கள் நலனுக்காக தமிழ்நாடு ஆளுநர் சுற்றுப்பயணம்!
- விவசாயிகள் தாமாக முன்வந்து நிலங்களை வழங்குகின்றனர்! – தமிழக முதல்வர்!
- வனப்பகுதியில் படம் பிடித்தால் 1 ரூபாய் அபராதமா?
- தெலுங்கானா மாநிலத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து! – 17 பேர் பலி!
- கள்ளக் காதலை கண்டித்த அக்காவை கொலை செய்த தங்கை!
- மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த சிறைக்காவலர்!
- ஏ.டி.எம் மையங்களில் லட்சக்கணக்கில் மோசடி!
- ஆற்றில் தொப்புள் கொடியுடன் கிடந்த ஆண் சிசு!
- இளம்பெண்ணைக் கொன்று தாலி கட்டிய லாரி ஓட்டுநர்!