released breathtaking recorded admitted Apollo indiatamilnews
தமிழகத்தின் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மூச்சுத் திணறலுடன் பேசியதாக அண்மையில் வெளியான ஆடியோ, அவர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவு செய்யப்படவில்லை என விசாரணை ஆணையம் உறுதி செய்துள்ளது.
கடந்த 25ஆம் திகதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் ஆஜரான மருத்துவர் சிவகுமார், சிகிச்சையின்போது ஜெயலலிதா மூச்சுத் திணறுலுடன் பேசியதாக ஆடியோ பதிவு ஒன்றை சமர்ப்பித்தார்.
இந்த ஆடியோ 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் திகதி பதிவு செய்யப்பட்டதாக சிவகுமார் தெரிவித்திருந்தார்.
இந்த ஆடியோ பதிவு செய்யப்பட்டபோது, மருத்துவர் அர்ச்சனாவும் உடனிருந்ததாக ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், செப்டம்பர் 28ஆம் திகதிதான் அப்போலோ மருத்துவமனையின் ஐசியு பிரிவில் ஜெயலலிதா சேர்ந்ததாக மருத்துவர் அர்ச்சனா ஏற்கெனவே ஆணையத்தில் கூறியிருந்தார்.
இதனால் அன்றைய தினம் ஜெயலலிதா பேசிய ஆடியோ பதிவு செய்யப்படவில்லை என ஆணையம் உறுதி செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சிவகுமாரிடம் மீண்டும் விசாரணை நடத்த விசாரணை ஆணையம் திட்டமிட்டுள்ளது.
audio released breathtaking TamilNadu recorded admitted Apollo
More Tamil News
போதும் என்னை விட்டுவிடுங்கள்! – நடிகை கஸ்தூரி வீடியோ!
கந்தக அமிலத்தை அகற்றினால் மீண்டும் திறக்கப்படுமா? – ஸ்டெர்லைட் ஆலை!
பா.ஜ.க அரசால் விவசாயி குடும்பத்துடன் தற்கொலை – காரணம் என்ன?
கர்ப்பிணி பெண்ணை காலால் எட்டி உதைத்த அரசு பேருந்து ஓட்டுனர்!
15 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டால் பரிசு – மிசோரமில் அறிவிப்பு!
Tamil News Group websites :