2034 இல் உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடர் சவுதியில்

0
177

2034ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண காற்பந்தாட்ட தொடர் சவுதி அரேபியாவில் நடத்தப்படும் என FIFA நிர்வாகக் குழு உறுதிப்படுத்தியுள்ளது.

2030ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள தொடரை ஸ்பெயின், போர்த்துக்கல் மற்றும் மொரோக்கோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவுள்ளன.

தொடரின் 100 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் 2030ஆம் ஆண்டு 3 போட்டிகள் ஆர்ஜென்டினா, பராகுவே மற்றும் உருகுவே ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளன.

நேற்று இடம்பெற்ற FIFA காங்கிரஸின் வாக்கெடுப்பில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் 2034 இல் உலகக் கிண்ண காற்பந்தாட்ட தொடர் சவுதியில் இடம்பெறவுள்ளது.

FIFA வில் அங்கம் வகிக்கும் 211 நாடுகளின் பிரதிநிதிகள் தொலை காணொளி ஊடாக இந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.