கஞ்சிபானை இம்ரானுக்கு வீட்டில் விருந்து வைத்த முஜிபுர் ரஹ்மான்: உண்மையா?

0
54

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான கஞ்சிபானை இம்ரானுக்கு தனது வீட்டில் விருந்து வைத்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விவாதத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

எவ்வாறாயினும், மஹிந்தானந்தவின் குற்றச்சாட்டுகளை முஜிபர் ரகுமான் மறுத்ததோடு அத்தகைய உறவு இருந்தால் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் தனக்கு எதிராக சட்டத்தை பிரயோகித்திருக்கும் என பதிலளித்தார்.

கோட்டாபயவின் அரசாங்கம் தம்மை உன்னிப்பாகக் கண்காணித்து வந்ததாகவும் அவரது தொலைபேசி அழைப்புகளைக் கூட கண்காணித்ததாகவும் அவர் கூறினார்.