இரா. சம்பந்தன் பூதவுடலுக்கு மஹிந்த அஞ்சலி

0
49

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தனின் பூதவுடல் இன்று (02) பொரளை ஏ.எப்.ரேமன்ட் மலர்ச்சாலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சம்பந்தனின் பூதவுடலுக்கு மலர்ச்சாலையில் தனது இறுதி மரியாதையை செலுத்தியுள்ளார்.

அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், கிழக்கு மாகாண ஆளுநா் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட பல பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இதேவேளை இரா.சம்பந்தனின் பூதவுடல் நாளை மறுதினம் பிற்பகல் 2 மணி முதல் 4 மணிவரை நாடாளுமன்றில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உடல்நல குறைவால் இரா. சம்பந்தன் நேற்று முன்தினம்(30) உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.