பாணந்துறை, கல்கிஸ்ஸை மற்றும் நுகேகொடை பகுதிகளில் வீதியில் செல்லும் பெண்களிடம் கொள்ளையிடும் நபர்களால் பிரதேச அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நபர்கள் கடந்த ஒரு மாதத்திற்குள் சுமார் 40 கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மொரகஹஹேன, கெஸ்பேவ, பிலியந்தலை, பொரலஸ்கமுவ, கஹதுடுவ, கடுவெல, தெபுவன போன்ற பிரதேசங்களில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.