நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் மீது தாக்குதல் முயற்சி

0
35

கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

புசல்லாவை அருள்மிகு ஸ்ரீ மஹா கணபதி ஆலயத்தின் அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (21) காலை நடைப்பெற்றது.

அந்நிகழ்வின் பின்னர் தனது அடுத்த நிகழ்வுக்கு செல்ல முற்பட்டபோதே அவர் மீது இந்த தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது..

இதனையடுத்து மக்களின் கடும் எதிர்ப்பினால் தாக்குதல் மேற்கொள்ளவந்த நபர்கள் பின்வாங்கி சென்றதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.