கொழும்பில் அடுத்தவாரம் திறக்கப்படும் பிரமாண்ட ஹோட்டல்: பல்வேறு பொழுபோக்கு அம்சங்கள்

0
42

கொழும்பு ITC ரத்னாதிப (Ratnadeepa) ஹோட்டல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் அடுத்த வாரம் திறந்து வைக்கப்பட உள்ளது. நீண்டகாலமாக கட்டுமானப் பணிகள் இடம்பெற்றுவந்த ITC ரத்னாதிப ஹோட்டல் எப்போது திறக்கப்படும் என்று சுற்றுலாப் பிரியர்கள் ஆர்வமாக எதிர்பார்த்திருந்தனர்.

பொருளாதார நெருக்கடி, ஆட்சி மாற்றங்கள் மற்றும் கொவிட் நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் இந்த ஹோட்டலின் நிர்மாணப் பணிகள் தாமதமாகி வந்தன.

இந்த நிலையில் தற்போது இதன் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளன. எதிர்வரும் வியாழக்கிழமை (ஏப்ரல் 25) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் ஹோட்டல் திறந்து வைக்கப்பட உள்ளது.

ITC ரத்னதீபா ஹோட்டல் திட்டமானது இந்தியாவில் புகழ்பெற்ற ITC Ltd இன் துணை நிறுவனமான WelcomHotels Lanka Ltd இன் செயல்படுத்தப்பட்டது.

இலங்கையில் ITC Ltd மேற்கொள்ளும் முதல் முதலீடாகவும் இத்திட்டம் உள்ளது. இந்த ஹோட்டலில் மக்களை கவரும் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன.

இந்த அதிசொகுசு ஹோட்டலின் அறிமுகமானது இலங்கையின் சுற்றுலாத்துறையில் வளர்ச்சிக்கு பங்களிக்கும் என அரசாங்கம் கூறியுள்ளது.