700 ஆண்டுகளாக எரிமலை உச்சியில் விநாயகர்: ஒளிந்து கிடக்கும் மர்மம்!

0
67

இந்தோனேசியாவில் உள்ள புரோமோ மலையில் (Mount Bromo) 700 ஆண்டுகள் பழமையான விநாயகர் சிலையொன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறித்த விநாயகர் சிலையானது எரிமலை வெடிக்காமல் பார்த்துக் கொள்ளும் வேலையை பார்ப்பதற்காக அங்கு இருப்பதாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

பசுபிக் கடலை சுற்றி உள்ள இடங்களை ரிங் ஆப் பயர் (Ring of Fire) என்று கூறுவதற்கு காரணம் அங்குள்ள எரிமலைகளாகும் நிலையில் இது புவியியல் கூற்று படி உலகின் மேற்பரப்பு தட்டுகளால் ஆனது.

விநாயகர் சிலை

தட்டுகள் நகரும் போதும் ஒன்றோடு ஒன்று மோதும் போதும் வேறு சில நில அமைப்புகள் உருவாகின்றமையினால் பசுபிக் கடலை சுற்றி இருக்கும் இடங்களில் தட்டுகள் விலகி இருக்கும்.

நிலத்தட்டுகள் விலகும் போது பூமியின் உள்பரப்பில் உள்ள சூடான நெருப்புக்குழம்பு வெளியே வருகின்றமையினால் எரிமலைகள் உருவாகின்றன.

சீனா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் செயலில் இருக்கும் எரிமலைக்கு இவையே காரணமாக அமைகின்றன.

எரிமலைகள் 

இந்தோனேசியாவில் அப்படி கிட்டத்தட்ட 141 எரிமலைகள் உள்ள நிலையில் அதில் குறைந்தது 130 எரிமலைகள் இன்னும் செயலில் உள்ளதோடு செயலில் உள்ள எரிமலைகள் என்றால் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் திறன் கொண்டது.

இவ்வாறு சில காலமாக இருந்துள்ள கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள ப்ரோமோ டெங்கர் செமரு (Bromo Tengger Semeru) தேசிய பூங்காவில் அமைந்துள்ள மவுண்ட் புரோமோ (Mount Bromo) இப்போது வெடிப்பதில்லை.

அதற்கு காரணம் இங்குள்ள விநாயகர் சிலையென மக்கள் தெரிவிப்பதோடு அதன் காரணமாக “ப்ரோமோ (Bromo)” என்ற சொல் இந்து முறைப்படி படைப்பின் கடவுளான பிரம்மாவின் ஜாவானிய உச்சரிப்பிலிருந்து பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பழங்குடியினர்

2012 வரையிலான பதிவுகளின்படி இந்தோனேசியாவின் முழுப்பகுதியிலும் 127 செயலில் எரிமலைகள் இருந்ததோடு அதேசமயம் சுமார் ஐந்து மில்லியன் மக்கள் ஆபத்து மண்டலங்களுக்குள் வசிப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

அதில் மவுண்ட் ப்ரோமோ எரிமலை பகுதியும் ஒன்றாக காணப்படுவதுடன் அங்கு டெங்கர் மாசிஃப் பழங்குடியினர் (Tribes of the Dengar Massif) அதிகம் வசிப்பதாக கூறப்படுகின்றது.

குறித்த எரிமலை அடிக்கடி வெடித்ததால் அங்குள்ள மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் இந்த மலையை வெடிக்காமல் பாதுகாக்க 700 ஆண்டுகளுக்கு முன்னர் தங்கள் மூதாதையர்கள் இங்கு ஒரு விநாயகர் சிலையை வைத்ததாகவும் அன்றில் இருந்து இன்று வரை இந்த எரிமலை சீற்றம் இடம்பெறவில்லையெனவும் மக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். இந்த எரிமலையில் இருந்து விநாயகப் பெருமான் தங்களைக் காப்பாற்றுவதாக உள்ளூர் மக்கள் நம்புவதாக தெரிவித்துள்ளனர்.

பாரம்பரியம்

இதன் காரணமாக அவர்கள் விநாயகருக்கு ஏராளமான பிரசாதங்களை வழங்குவதுடன் இங்கு விநாயகப் பெருமானை வழிபடுவது மட்டுமின்றி பூக்களும் மற்றும் பழங்களும் பிரசாதமாகவும் வழங்கப்படுகின்றன.

அவ்வாறு செய்யாவிட்டால் எரிமலை வெடித்து இங்குள்ள மக்களை தின்றுவிடும் என்பது அங்குள்ள மக்களின் நபிக்கையாகவும் காணப்படுகின்றது.

ஆனால், ஒரு எரிமலை வெடித்தாலும் கணபதி வழிபாடு இங்கு நிற்காததுடன் காலம் , அபாயம் மற்றும் எரிமலை வெடிப்பு என்று எதனையும் பொருட்படுத்தாமல் இங்கு இந்த விநாயகரை வழிபடும் பாரம்பரியம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இதனால் இந்தோனேசியா செல்லும் சாகச விரும்பிகள் இந்த வியப்பிற்கு உள்ளாக்கும் இடத்தை பார்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.