டொலர் கொள்வனவு தொடர்பில் மத்திய வங்கி விசேட அறிவிப்பு!

0
36

2024 மார்ச் மாதத்தில்  இலங்கை மத்திய வங்கி அந்நிய செலாவணி சந்தையில் இருந்து 715 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொள்வனவு செய்துள்ளதாக மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன.

மேலும், பெப்ரவரி மாதத்தில் அந்நிய செலாவணி சந்தையில் இருந்து மத்திய வங்கி 239.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொள்வனவு செய்துள்ளது.

அதன்படி, இந்த வருடத்தில் இதுவரை சந்தையிலிருந்து மத்திய வங்கி கொள்வனவு செய்த மொத்தத் தொகை 1,199 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக உத்தியோகபூர்வ தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.