தனது திருத்தப்பட்ட காணொளியைப் பயன்படுத்தி இணைய வழி மோசடி இடம்பெறுவதாக மெத்யூஸ் எச்சரிக்கை

0
42

திருத்தப்பட்ட தனது காணொளி காட்சிகளைப் பயன்படுத்தி இணைய வழி நிதி மோசடி இடம்பெறும் சம்பவம் ஒன்றை  இலங்கையின் சிரேஷ்ட கிரிக்கெட் வீரர் ஏஞ்சலோ மெத்யூஸ் அம்பலப்படுத்தியுள்ளார்.

உள்ளூர் தொலைக்காட்சி சேவை ஒன்றில் ஒளிபரப்பான கிரிக்கெட் வீரரின் பேட்டிக்கு மாற்றுக் குரல் கொடுத்து பந்தயம் பிடிக்கும் விளையாட்டை விளம்பரப்படுத்துவதற்காக இந்த காணொளி பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மோசடி செயல்பாட்டை மெத்யூஸ் அம்பலப்படுத்தியுள்ளார், அது ‘ஒரு முற்றுமுழுதான மோசடி’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘மக்களை ஏமாற்றும், தீங்கிழைக்கும் இந்த செயலானது எனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் ஒரு முயற்சியாகும். முன்னணி தொலைக்காட்சி வலையமைப்பில் இருந்து எடுக்கப்பட்ட தனது திருத்தப்பட்ட காணொளியை இந்த மோசடிக்காரர்கள் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர்.

தயவு செய்து இத்தகைய செயல்பாடுகள் தொடர்பாகப் புகார் செய்து அதிகாரிகளை எச்சரிக்கவும்.  இது குறித்துச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்வேன்’ என அவர் கூறியுள்ளார்.