அனுமதி பத்திரம் இல்லாமல் மாட்டிறைச்சியை விற்பனைக்காக வைத்திருந்த இருவர் கம்பளை விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கம்பளை விஷேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய நேற்று இரவு கம்பளை ஜயமாலப்புர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சோதனை நடத்திய பொழுது விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 95 கிலோ கிராம் மாட்டு இறைச்சியை மீட்டுள்ளனர்.
இதேவேளை, 47 மற்றும் 27 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிரடிப்படையினர் சந்தேக நபர்களை கம்பளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். மாடுகளை திருடி வரும் கும்பளை தேடி பொலிஸார் விசாரணை முன்னேடுத்து வருகின்றனர்.