யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க; மக்களிடம் காணிகள் கையளிப்பு

0
61

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை (22) யாழ்ப்பாணத்தை சென்றடைந்துள்ளார். பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்தை சென்றடைந்த ஜனாதிபதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட குழுவினர் வரவேற்றனர்.

 278 ஏக்கர் காணி விடுவிப்பு

யாழ்ப்பாணத்தை சென்றடைந்த ஜனாதிபதி கடந்த 33 வருட காலமாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த தனியாரின் சுமார் 278 ஏக்கர் காணிகளை அதன் உரிமையாளரிடம் மீள கையளிக்கவுள்ளார்.

அத்துடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள அவசர சிகிச்சை பிரிவையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திறந்து வைக்கவுள்ளார்.