பாதாள உலக குழு உறுப்பினர்கள் மூவர் கைது

0
63

குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களை ஒடுக்கும் விசேட நடவடிக்கைக்கு அமைய மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (19) இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, பொரளை பிரதேசத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் குழு உறுப்பினர் கெசல்வத்த தினுகவின் நெருங்கிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் கஞ்சிபானை இம்ரானின் குற்றக் கும்பலைச் சேர்ந்த ‘கோடா ரிஸ்வான்’ என அழைக்கப்படும் அஹமட் ஜிப்ரி அஹமட் றிஸ்வான் என்ற சந்தேக நபர் 6,400 மில்லிகிராம் ஹெரோயினுடன் மாளிகாவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும், காஜிமா வத்தை மைதானத்திற்கு அருகில் 6,620 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் குற்ற கும்பலைச் சேர்ந்த புகுடு கண்ணாவின் உதவியாளரான முனவீர ஆராச்சிலகே சுசந்த என்ற சந்தேக நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.