2009 இன் பின்னர் புலம்பெயர் நாடுகளில் தொடரும் குழப்பம்

0
60

வெடுக்குநாறிமலை ஆலயத்தில் இடம்பெற்ற சம்பவமானது இலங்கை வாழ்த் தமிழர்களை மாத்திரம் அன்றி உலகம் முழுவதும் வாழும் சைவத் தமிழர்களின் மனதையும் பாதித்துள்ளது என சுவிட்சர்லாந்தின் சைவநெறிக்கூட ஒருங்கிணைப்பாளர் சசிகுமார் தெரிவித்தார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும், ஒரு கோவிலை அபகரிப்பது மாத்திரமின்றி ஒரு இனத்தின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயலாகவே இது பார்க்கப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், 2009 இன் பின்னர் புலம்பெயர் நாடுகளில் தொடரும் குழப்பம் தொடர்பிலும் அவர் தெளிவுப்படுத்தினார்.