தடைகளை மீறி வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் மஹா சிவராத்தி !

0
96

ஸ்ரீலங்கா பொலீசார் மற்றும் அதிரடிப் படையினரின் தடைகளை மீறி ஏராளமான பக்தர்களுடன் வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் மஹா சிவராத்திரி வழிபாடு ந்டத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் உள்ளிட்ட தமிழ் அரசியல்வாதிகளுடன் பொதுமக்கள் பல்லரும்   இன்றையதினம் ஆதிலிக்கேஸ்வரர் ஆலயத்தில் வழிபாடு நடத்தி இருந்தனர்.

பொலிஸார்  அடாவடி

தடை உடைத்துச் சென்றதன் கோபம் காரணமாக அப்பகுதிக்குச் சென்ற ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கான நீர் விநியோகத்தை அறவே தடுத்து பொலீசார் மனித நேயமற்ற அருவருக்கத்தக்க செயலை புரிந்தனர்.

இவர்களுடன் இணைந்து வாழ்வது கிஞ்சித்தும் சாத்தியமற்றது என்கின்ற ஓர்மத்தை ஒவ்வொரு ஈழத்தமிழனின் மனமும் சிவராத்திரி அன்று சிவனை வேண்டி நிற்கிறது .

உலகவாழ் இந்துக்களால் இன்றையதினம் சிவபெருமானுக்கு உரிய மஹா சிவராத்திரி விரதம் அனுஸ்டிக்கப்படும் நிலையில், வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதியழித்திருந்தது.

எனினும் நீதிமன்ற அடுமதியை உதாசீனம் செய்து இலங்கைப்பொலிசார் ஆலயத்திற்கு வழிபட வந்தவர்களுக்கு தடைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.