பாடகர் வேல்முருகன் மதுபோதையில் விமான நிலையத்துள் தகராறு..

0
80

பாடகர் வேல்முருகன் மது போதையில் இருந்ததாகக் கூறி அவரது விமான பயணத்தை ரத்து செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாடகர் வேல்முருகன்

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகராக இருப்பவர் வேல்முருகன். நாட்டுப்புற கலைஞரான இவர் பல திரைப்படங்களில் பாடியுள்ளார். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில் அவர் திருச்சி செல்வதற்காக சென்னை விமான நிலையில் வந்துள்ளார். அப்போது அவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக வேல்முருகன் விமானத்தில் பயணம் செய்ய மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர்கள் செய்ய அனுமதிக்க மறுத்துள்ளனர்.

தகராறு 

இதனால் ஆத்திரமடைந்த அவர் பாதுகாப்பு படை வீரர்களிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து வேல்முருகனின் விமான பயணத்தை ரத்து செய்தனர்.

பின்னர் அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டதன் பேரில் வேறு விமானத்தில் திருச்சி அனுப்பி வைக்கப்பட்டார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.