தினம் தினம் நடிகை செய்த படுமோசமான செயல்; கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

0
92

நடிகை செளமியா ஷெட்டி, நண்பியின் வீட்டில் கிலோ கணக்கில் நகைத்திருட்டில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடைய பிரபல்யத்தைக் காத்துக் கொள்வதற்காகவும் பணத்தாசையிலும் நகைகளைத் திருடும் அளவுக்கு நடிகை செளமியா ஷெட்டி சென்றிருக்கிறார்.

நடிகை செளமியா ஷெட்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள், ரீல்ஸ் போட்டு இணையத்தில் பிரபலமானவர். அதன்பின்னர் தெலுங்கில் ‘டிரிப்’ என்றப் படத்தில் நடித்திருக்கும் செளமியா ஷெட்டி, ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் திருட்டு வழக்கில் சிக்கி கைதாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினம் தினம்  களவு

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், விசாகப்பட்டினத்தில், பாலாஜி மெட்ரோ ரெசிடென்சி பிளாட் எண் 102ல் ஜனபால் பிரசாத்பாபு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் வீட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 23ம் திகதி 1 கிலோ 750 கிராம் தங்க நகைகள் திருடு போயிருப்பதாக பொலிஸில் முறைப்பாடு கொடுத்துள்ளனர்.

விசாரணை மேற்கொண்ட பொலிஸார் ஜனபால் பிரசாத் பாபு வசித்து வரும் குடியிருப்பில் சிசிரிவி கெமரா மற்றும் திருடு போன பீரோவில் கைரேகை உள்ளிட்ட விஷயங்கள் சேகரிக்கப்பட்டு ஜனபாலிடம் நடத்திய விசாரணையையடுத்து நடிகை செளமியா உள்ளிட்ட மூவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

ஜனபாலின் மகள் மெளனிகாவுடன் கடந்த எட்டு வருடங்களாக பழகி வந்திருக்கிறார் நடிகை செளமியா. நட்பை அட்வான்டேஜாக எடுத்துக் கொண்டு அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றவர், ஒவ்வொரு முறையும் சிறு சிறு நகைத்திருட்டில் ஈடுபட்டிருக்கிறார்.

வீட்டுக்கு வந்து செல்லும் போதெல்லாம் மெளனிகாவின் அறையை குளிப்பதற்காகப் பயன்படுத்தும் செளமியா அந்தத் தருணத்தை தனது நகைத்திருட்டிற்கு பயன்படுத்தியமை பொலிஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

இவ்வாறு சுமார் ஒரு கிலோ தங்கம் வரை திருடியிருக்கிறார் செளமியா. உறவினர்கள் திருமணத்திற்காக செல்ல நகைகளை அணிவதற்காக பீரோவைத் திறந்து பார்த்த போது தான் நகைகள் திருடு போன விஷயம் ஜனபால் குடும்பத்திற்கு தெரிய வந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பொலிஸாரிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டத்தை அடுத்தே நடிகையின் குட்டு வெளிப்பட்டதை அடுத்து செளமியா தான் குற்றவாளி என்பதை உறுதி செய்த பொலிஸார் அவரை கோவாவில் கைது செய்து 74 கிராம் தங்கத்தை மீட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் நண்பியின் வீட்டில் களவெடுத்த நடிக்கை செளமியாவை நெட்டிசன்கள் திட்டித்தீர்த்துவருகின்றனர்.