இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் ஸ்பெயின் பெண் கூட்டு பலாத்காரம்!

0
78

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் ஏனைய நபர்களை தேடி வருகின்றனர்.

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 28 வயதான பெண் ஒருவரும், 64 வயதான அவரது கணவரும் மேற்குவங்க மாநிலத்தில் இருந்து பீகார் நோக்கி மோட்டார் சைக்கிள்களில் சென்று கொண்டிருந்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு குருமஹாத் என்ற பிரதேசத்தில் நடுவழியில் சாலையோரம் கூடாரம் அமைத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர்.

அந்த இரவு நேரத்தில் கூடாரத்திற்கு சென்ற சிலர் அவர்களை தாக்கியுள்ளதுடன் பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார். நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏனையோரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சுமார் எட்டு உள்ளூர் இளைஞர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்தியிருக்கலாம் செய்திருக்கலாம் என அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தால் எதிர்க்கட்சிகள் கடும் அதிருப்தியடைந்துள்ளன. இந்திய பிரதமர் மோடி சனிக்கிழமை ஜார்க்கண்ட் விஜயத்தின் போது இந்த சம்பவத்தை வன்மையாக கண்டித்ததுடன் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது குறித்து கவலை தெரிவித்துள்ளார்.