எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் தாம் ஆரணித் தொகுதியில் போட்டியிட உள்ளதாக நடிகரும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மன்சூர் அலிகான் இதனைத் தெரிவித்துள்ளார். மக்களின் பசியை போக்க அல்ல மாறாக அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு அரசியல் நடத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தின்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுவதற்கு வேட்புமனு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.