லட்சக்கணக்கான பணம்; ரஷ்யாவில் சிக்கலில் மாட்டிக்கொண்ட இந்திய இளைஞர்கள்!

0
98

ரஷ்யா சென்று லட்சக்கணக்கான ரூபாயை சம்பாதித்து விடலாம் என நினைத்து சில இந்திய இளைஞர்கள் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளனர்.

குறித்த இந்தியர்கள் முகவர்களின் வார்த்தைகளை நம்பியதால், தற்போது உக்ரைனுடனான ரஷ்யாவின் போரில் முன்கள வீரர்களாக போரிட்டுக் கொண்டிருப்பவதாகக் கூறுகிறார்கள்.

உதவியாளர் பணிக்கு அழைத்து வந்து, ஏமாற்றி ராணுவத்தில் இணைந்துகொண்டதாகவும் அவர்கள் முறைப்பாடு அளித்துள்ளனர். தெலங்கானா உள்ளிட்ட கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் இருந்து 16 பேர் ரஷ்யா சென்றுள்ளனர். பாதுகாப்பு மற்றும் உதவியாளர் வேலை தருவதாக கூறி இந்திய இளைஞர்களை முகவர்கள் மூலம் அழைத்துச் சென்றுள்ளனர்.

இதற்காக ரஷ்யாவில் இரண்டு முகவர்கள் மற்றும் இந்தியாவில் இரண்டு முகவர்கள் உள்ளனர். பைசல் கான் என்ற மற்றொரு முகவர் துபாயில் இருந்து இந்த 4 பேரையும் ஒருங்கிணைத்துள்ளார்.

பாபா விலாக்ஸ் என்ற யூடியூப் சேனலையும் அவர் நடத்தி வருகிறார். ரஷ்யாவில் உதவியாளர் வேலைகள் குறித்த வீடியோக்களை தனது யூடியூப் சேனலில் போட்டு இளைஞர்களை அவர் ஈர்க்கிறார்.

அந்த வீடியோக்களை பார்த்துவிட்டு, அதில் கொடுக்கப்பட்டிருக்கும் தொலைபேசி எண்களை வேலை தேடும் இளைஞர்கள் தொடர்பு கொள்கிறார்கள்.

35 பேரையும் ரஷ்யாவுக்கு அனுப்ப முகவர்கள் திட்டமிட்டுள்ளனர். அவர்களில் 3 பேர் கடந்த நவம்பர் 9, 2023 அன்று இந்தியாவை விட்டு வெளியேறினர். சென்னை சென்று, அங்கிருந்து ஷார்ஜா, பின் மாஸ்கோவுக்கு 12 ஆம் திகதி சென்றுள்ளனர்.

நவம்பர் 16 அன்று, பைசல்கானின் அணி 7 பேரை ரஷ்யாவிற்கு அழைத்துச் சென்றது. அவர்களுக்கு சில நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு, டிசம்பர் 24ம் திகதி ராணுவத்தில் இணைக்கப்பட்டதாக அவர்களின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

துபாயில் உள்ள முகவரான பைசல் கான், பாதுகாப்பு மற்றும் உதவியாளர் வேலைகள் பற்றி யாரிடமும் எங்கும் கூறவில்லை என இளைஞர்களின் குடும்பத்தினர் சர்வதேச ஊடகம் ஒன்றிடம் கூறியுள்ளனர்.